Loading...

சனி, 21 ஜனவரி, 2012

நாங்குநேரி அருகே கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள் ரகளை: 15 பேர் மீது வழக்கு


நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சவளைக் காரன்குளம் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளனர். விளையாட்டில் பரப்பாடி அணி வெற்றி பெற்றதும் அவர்கள் குறிப்பிட்ட சில சமுதாய தலைவர் பெயர்களை கூறி கோஷமிட்டு சென்றுள்ளனர்.

இதை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் நாராயணன் (26) என்பவர் தட்டி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் கள் நாராயணனையும் அவ மரியாதையாக பேசினார் களாம். இதுகுறித்து நாராயணன், விஜய நாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பரப்பாடியை சேர்ந்த மோசஸ் ஜெபவினீத் (22), ஜோசுவா (17), கிப்ட்சன், மேசாக், ஜெயகுமார் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மோசஸ் ஜெப வினீத் மற்றும் ஜோசுவா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய் தனர். மற்றவர்களை தேடிவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: