Loading...

திங்கள், 23 ஜனவரி, 2012

ம.தி.மு.க., தேர்தல் அலுவலகம் சங்கரன்கோவிலில் திறப்பு

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் நேற்று ம.தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார் திறந்து வைத்தார்.
சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் நேற்று ம.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம் ஏற்றினார். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் வாணிபிச்சையா, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சிங்கப்புலிபாண்டியன், சங்கர், தினகரன், வக்கீல்கள் மாதவராம், புஷ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், நகர மாணவரணி செயலாளர் ஆறுமுகச்சாமி, நகர துணை செயலாளர் ராஜகோபால், சிவசங்கரன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: