Loading...

சனி, 21 ஜனவரி, 2012

ஆலங்குளம் அருகே திருமணம்- நிச்சயித்த பெண் கடத்தப்பட்டதால் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து


ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது60). இவரது தம்பி பெரியசாமி (47). இவர்களது சகோதரி மகள் தீபாவை, முத்து பாண்டியன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் பேசி திருமண நிச்சயம் செய்தனர். ஆனால் தீபா பெரியசாமியின் மகனை காதலித்து வந்துள்ளார்.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியசாமியின் மகன் தீபாவை வெளியூர் கடத்தி சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அண்ணன் தம்பிகளான முத்துபாண்டியனுக்கும், பெரியசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி, பெரியசாமியை கத்தியால் குத்தினார். பலத்த காயம் அடைந்த பெரியசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை: